Thursday, November 7, 2013

Pengalai Patri Naan.....!

பெண்களை வாடி போடி என்றும்..வாமா போமா என்றும் வாடா போடா என்றும் பா என்றும் செல்லம் குட்டி என்றும் அழைப்பது அனைத்து ஆண்களின் வழக்கமாக இருக்கிறது.

இதையெல்லாம் என்ன அர்த்தத்தில் அவர்களை அப்படி அழைக்கிறோம் என்று அநேகம் பேருக்கு தெரிவதில்லை.(மா..டி..பா..டா..குட்டி..செல்லம்)இதற்கு எல்லாம் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது.

மா என்று அழைப்பது அவர்களை ஒரு தாயாக நினைத்து,

பா என்று அழைப்பது அவர்களை தந்தைக்கு நிகராக நினைத்து,

டா என்று அழைப்பது அவர்களை தன் தோழனுக்கு நிகராக நினைத்து (தனக்கு நிகராகவும் நினைத்து தான்) அதாவது ஆணுக்கு பெண் சமம் என்ற அடிப்படையில்,

குட்டி என்றுஅழைப்பது குழந்தைக்கு நிகராகவும்

செல்லம் என்று அழைப்பது தன்னுடைய அன்புக்கு நிகராகவும் அழைக்கிறார்கள்.

ஆனால் டி என்ற வார்த்தை தன்னுடைய மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும்.

அதனால் தான் நான் பெண்களை வாடி போடி என்று அழைப்பதில்லை.

அந்த எழுத்து என் மனைவிக்கானது..அதை நான் மற்ற பெண்களிடம் பயன்படுத்த விரும்பவில்லை.....

Harris ViNo

No comments:

Post a Comment